search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரத்குமார்
    X
    சரத்குமார்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்தில உள்ள மாநகராட்சிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரி குறைப்பு செய்திடவும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்தில உள்ள மாநகராட்சிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×