என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இளையராஜாவின் கருத்தை சர்ச்சை ஆக்க கூடாது- ஜி.கே.வாசன் அறிக்கை
Byமாலை மலர்19 April 2022 10:33 AM GMT (Updated: 19 April 2022 10:33 AM GMT)
ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாட்டில் இளையராஜாவுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இசைஞானி இளையராஜாவின் கருத்தை சர்ச்சையாக்குவது சரியானதல்ல. இசைஞானி இளையராஜா தனது இசைத்திறமையால் தமிழ்நாட்டின் புகழை, இந்தியாவின் புகழை இசையின் மூலம் உலக அளவில் நிலைநாட்டி, பரப்புவது பெரிதும் பாராட்டத்தக்கது. பொதுவாக ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாட்டில் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது.
இந்த நிலையில் இது போன்ற கருத்துக்கு அரசியல் சாயம் பூசி சர்ச்சையாக்குவது சரியல்ல. தேசியத் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் பாராட்டுவதும், புகழ்வதும் புதிதல்ல, தவறல்ல. எனவே இசைஞானியின் சொந்த கருத்து சர்ச்சையாக்கப்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இசைஞானி இளையராஜாவின் கருத்தை சர்ச்சையாக்குவது சரியானதல்ல. இசைஞானி இளையராஜா தனது இசைத்திறமையால் தமிழ்நாட்டின் புகழை, இந்தியாவின் புகழை இசையின் மூலம் உலக அளவில் நிலைநாட்டி, பரப்புவது பெரிதும் பாராட்டத்தக்கது. பொதுவாக ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாட்டில் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது.
இந்த நிலையில் இது போன்ற கருத்துக்கு அரசியல் சாயம் பூசி சர்ச்சையாக்குவது சரியல்ல. தேசியத் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் பாராட்டுவதும், புகழ்வதும் புதிதல்ல, தவறல்ல. எனவே இசைஞானியின் சொந்த கருத்து சர்ச்சையாக்கப்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X