search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    தண்ணீரில் மூழ்கி பெண் சாவு

    தண்ணீரில் மூழ்கி பெண் இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி :

    திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது55). இவர் பெயிண்டராக அந்த பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ் பேகம் (47) இவர் கடந்த சில தினங்களாக மன உழைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மும்தாஜ்,  நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த முகமது ரபீக் தன் உறவினர்களுடன் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.

    இந்நிலையில் குடிமுருட்டி பாலம் அருகே தண்ணீரில் பெண் ஒருவர் இறந்தநிலையில் கிடப்பதாக ரபீக்கிற்கு தகவல் கிடைத்துள்ளது.

    அங்கு சென்று பார்த்த போது தன் மனைவி மும்தாஜ் பேகம் தான் என்பதை உறுதி செய்து கொண்ட ரபீக்,  இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு- செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×