என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மகளுக்கு விஷம் கொடுத்து நர்சு தற்கொலை முயற்சி- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Byமாலை மலர்17 April 2022 10:14 AM GMT (Updated: 17 April 2022 10:14 AM GMT)
குடும்ப பிரச்சினை காரணமாக நர்சு தனது மகளுக்கு விஷத்தை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனியார் காற்றாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 38). இவர் பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை வழக்கம்போல் மாடசாமி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் பணி முடிந்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது சுமதி மற்றும் அவர்களது மகள் சுபா ராஜேஸ்வரி (8) ஆகியோர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாடசாமி அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக சுமதி தனது மகள் சுபா ராஜேஸ்வரிக்கு விஷத்தை கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனியார் காற்றாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 38). இவர் பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை வழக்கம்போல் மாடசாமி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் பணி முடிந்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது சுமதி மற்றும் அவர்களது மகள் சுபா ராஜேஸ்வரி (8) ஆகியோர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாடசாமி அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக சுமதி தனது மகள் சுபா ராஜேஸ்வரிக்கு விஷத்தை கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X