search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

    இதுகுறித்து கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    கோவை: 

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பிரசாந்த்குமார்(32). தனியார் நிறுவன ஊழியர். இவர் தெற்கு உக்கடத்தை சேர்ந்த ரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்தனர். 

    சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்படவே வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரசாந்த்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×