என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தக்கலை அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்17 April 2022 8:57 AM GMT (Updated: 17 April 2022 8:57 AM GMT)
தக்கலை அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே அப்பட்டுவிளை சிவனி கோணம் பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் தாசன். இவரது மகன் கெனிஷ் (வயது 29). கூலி தொழிலாளி.
பிளஸ்-2 வரை படித்த இவர் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மன வருத்த்துடன் காணப்பட்டார். நேற்று இரவு தனது தாயார் கோவிலுக்கு சென்றதும் அறைகதவை மூடி விட்டு உள்ளே சென்றார்.
தாயார் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டில் வந்து பார்த்த போது கெனிஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைகண்டு அலறிய அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர், அவர்கள் கெனீஷ் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கெனிசின் தாயார் மேரி சரோஜினி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X