search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மேட்டுப்பாளையத்தில் விபத்து- மேலும் ஒரு மாணவர் பலி

    கார் கோத்தகிரி ரோட்டில் கடைசி வளைவில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் வலதுபுறம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    சிறுமுகை: 

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  காட்டூர் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முக்தார் அலி. இவரது மகன் முகமது இர்பான்(வயது18). 
     
    இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்  முதலாமாண்டு படித்து வருகிறார்.  பாரதி நகரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரது மகன் முகம்மது தவ்பீக்(16). பிளஸ்-1 மாணவர். 

    அப்துல் ஹமீது என்பவரது மகன் ஆரிப் என்கிற முகமது ஆரிப் (16).பிளஸ்-1மாணவர். கைசர் அகமது என்பவரது மகன் காலித்(16).10-ம் வகுப்பு மாணவர். சலீம் என்பவரது மகன் ஹர்ஷத்(16).பிளஸ்-1 மாணவர். 

    நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று காலை கோத்தகிரி சென்று விட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை முகமது இர்பான் ஓட்டினார்.

    கார் கோத்தகிரி ரோட்டில் கடைசி வளைவில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் வலதுபுறம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற முகம்மது தவபீக்(16), முகமது ஆரிப்(16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 

    மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக  கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காலித் என்ற மாணவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டார். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×