என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீன்குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Byமாலை மலர்17 April 2022 8:23 AM GMT (Updated: 17 April 2022 9:40 AM GMT)
மீன்குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காட்டூரை சேர்ந்தவர் ராஜாகுமார். இவரது மகன் கிருத்திக். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
4 நாட்கள் பள்ளிக்கு தொடர் விடுமுறை விட்டதால் கிருத்திக் தனது உறவினர் தொட்டியத்தில் உள்ள ஹரிஹரன் என்பவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் உறவினர்கள் கிருத்திக்கை கிழக்கரைகாட்டிலுள்ள மீன் பண்ணைக்கு சுற்றி காட்டுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது கிருத்திக் விளையாடிக் கொண்டிருந்த போது மீன் பண்ணை குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.
உடனே அக்கம் பக்கத்தினர் கிருத்திகை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X