search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருத்திக்
    X
    கிருத்திக்

    மீன்குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

    மீன்குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காட்டூரை சேர்ந்தவர்  ராஜாகுமார். இவரது  மகன் கிருத்திக். இவர் அதே பகுதியில்  உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.  

    4 நாட்கள் பள்ளிக்கு தொடர் விடுமுறை விட்டதால் கிருத்திக் தனது  உறவினர் தொட்டியத்தில் உள்ள  ஹரிஹரன் என்பவர் வீட்டிற்கு வந்தார். பின்னர்  உறவினர்கள் கிருத்திக்கை  கிழக்கரைகாட்டிலுள்ள மீன் பண்ணைக்கு சுற்றி காட்டுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

    அப்போது  கிருத்திக்  விளையாடிக்  கொண்டிருந்த போது மீன் பண்ணை குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான். 

    உடனே அக்கம் பக்கத்தினர் கிருத்திகை  மீட்டு சிகிச்சைக்காக   தொட்டியம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை  பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். 

    இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×