search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தருமபுரி அருகே 2 பெண்டாட்டிக்காரர் விஷம்குடித்து தற்கொலை

    தருமபுரி அருகே 2 பெண்டாட்டிக்காரர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி.

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள நாகதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 60). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சின்னராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துவந்தது. இதனால் நேற்று தனது குடும்பத்தினரிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு குடும்பத்தினர் அவரை கண்டித்து திட்டி பேசியதாத கூறப்படுகிறது.

    இதில் மனவேதனை அடைந்த சின்னராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். பின்னர் அங்கிருந்து நேராக சுடுகாட்டுக்கு சென்று படுத்து கொண்டார். அப்போது அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் சின்னராஜ், உயிருக்கு போராடியதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×