என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் போலீஸ் கணவர் தற்கொலை
Byமாலை மலர்16 April 2022 10:18 AM GMT (Updated: 16 April 2022 10:18 AM GMT)
பெண் போலீசின் கணவர் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் தங்கம் (வயது 45). இவருடைய கணவர் ராஜா (49). இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சிவில் சப்ளை துறையில் தர ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு ஹரிநேத்ரா (14), ஹரி ரூபன் (9) என்கிற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா கடந்த 15 தினங்களாக மருத்துவ விடுப்பில் இருந்ததாகவும், அப்பொழுது கணவன் மனைவிக்கு இடையே பிரச் சனை ஏற்பட்டு ஏட்டு தங்கம் காவலர் குடியிருப் பிலும், அவரது கணவர் ராஜா வடக்கு தெருவில் உள்ள அவரது வீட்டில் தனித்தனியே வசித்து வந்ததாக கூறப்ப டுகிறது.
இந்நிலையில் ராஜாவின் வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவைத் திறந்து பார்த்த பொழுது,
ராஜா படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து உடலை கைபற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம் பவம் தொடர்பாக துறையூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
துறையூர் பகுதியில் பெண் ஏட்டு ஒருவரின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X