search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    X
    சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

    மேலக்காட்டுவிளை கைலாசநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    மேலக்காட்டுவிளை கைலாசநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    என்.ஜி.ஓ.காலனி, ஏப்.16-

    மேலக்காட்டுவிளை  கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை பெருந் திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் சிறப்பு விருந்தி னராக முன்னாள் அமைச் சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு ஊர்த்தலைவர் வக்கீல்  செல்வகுமார் தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் திருநாமச்செல்வன், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயகிருஷ் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி  51-வது வார்டு  உறுப்பினர் முத்துராமன், ராஜாக்க மங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, தெங்கம்புதூர் பேரூர் கழக செயலாளர் முத்துகுமார், ராஜக்கமங்கலம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் காட்வின், புத்தளம் குமரேசன், ரமேஷ், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×