search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் வழிபாடு
    X
    சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் வழிபாடு

    சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் வழிபாடு

    தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கூவாகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சித்ராபவுர்ணமி வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டு மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர். இன்று கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கூவாகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சித்ராபவுர்ணமி வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வருகிற 19-ந் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அப்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு அரவாணை கணவனாக ஏற்று அன்று இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்வார்கள்.

    மறுநாள் 20-ந் தேதி காலை 6 மணிக்கு தேரோட் டம் தொடங்கி பந்தலடி சென்று அங்கு அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்து வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து விதவை கோலம் பூண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.

    21-ந் தேதி தர்மர் பட்டாபி ஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா விமரிசையாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×