search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் 11,000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
    X
    காரைக்காலில் 11,000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

    மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்கியது- காரைக்காலில் 11,000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

    காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று காலை முதல் தொடங்கியதையொட்டி, காரைக்காலில் சுமார் 11 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 11,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்
    காரைக்கால்:

    காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று(15-.4.-22) காலை முதல் தொடங்கியதையொட்டி, காரைக்காலில் சுமார் 11 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 11,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி, ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன்,14ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால், மீன்களின் வயிற்றில் உள்ள சினை(முட்டை) அழிக்கப்பட்டு மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால், மத்திய-மாநில அரசு இந்த 61 நாட்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. அதன்படி, காரைக்கால் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமத்தில் உள்ள சுமார் 450 விசைப்படகிலிருந்து சுமார் 11, ஆயிரம் மீனவர்கள் இன்று(15.4.22) காலை முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. முன்னதாக, நேற்று மாலை முதல் கடலுக்கு சென்ற மீனவர்கள் பெரும்பாலோனோர் கரை திரும்பினர். இன்று முதல் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத காரணத்தால், மீன்பிடி துறைமுகம் மற்றும் அரசலாற்றங்கரையில் விசைப்படகுகள் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சில மீனவர்கள் மட்டும் பைபர் படகுகளில் குறைந்த தூரம் மட்டுமே சென்றுள்ளனர். இவர்கள் காலை சென்று மாலைக்குள் சிறிய அளவிலான மீன்களை மட்டுமே பிடித்துவருவார்கள். இந்த மீன்பிடி தடைகாலத்தில், பெரும்பாலான மீனவர்கள் தங்கள் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுதுபார்ப்பதில் தீவிரமாக செயல்படுவார்கள்.

    நிவாரணத்தை உயர்த்தவேண்டும் மீன்பிடி தடைக்காலம் குறித்து மீனவர்கள் கூறியதாவது:-மீன்பிடி தடைக்கால நிவாரணமாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் ரூ.5,500 வழங்கி வருகிறது. விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு இத்தொகையை இரு மடங்காக அதிகரித்து தரவேண்டும். அதேபோல், படகு பழுதுபார்ப்பு தொகையையும் இரட்டிப்பாக மாற்றவேண்டும். டீசல் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதால், மானியவிலையில்(வரி இல்லாமல்) டீசல் வழங்க, மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். மீன்பிடி துறைமுகம், கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தூர்வாராமல் இருப்பதால், இந்த 2 மாத காலத்தில் மீன்பிடி துறைமுகத்தை முழுமையாக தூர்வாரவேண்டும். துறைமுகம் உள்ளே மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் போதே தடைக்கால் நிவாரணம் வழங்கவேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×