என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் விபத்தில் பள்ளி மாணவர் பலி
Byமாலை மலர்15 April 2022 11:27 AM GMT (Updated: 15 April 2022 11:27 AM GMT)
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை கணபதி அருகே உள்ள கிருஷ்ணராஜ் காலனியை சேர்ந்தவர் சகாய அந்தோணி ராஜ். இவரது மகன் ஜெரோம் ரோசாரியோ (வயது 16). பள்ளி மாணவர்.
சம்பவத்தன்று இவர் தனது தந்தையின் மொபட்டில் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஹிர்திக் (16) என்பவரை ஏற்றிக்கொண்டு சென்றார். மொபட் கோவை-திருச்சி ரோட்டில் ஒண்டிப்புதூர் ரெயில்வே மேம்பாலம் சென்ற போது மொபட்டை ஓட்டிச் சென்ற ஜெரோம் ரோசாரியோ அலட்சியமாகவும், வேகமாகவும் ஓட்டினார்.
அப்போது மொபட் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற அடையாளம் தெரியாத லாரியின் பின்னால் மோதியது. இதில் தலை மற்றும் மார்பில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெரோம் ரோசாரியோவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X