search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது
    X
    கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது

    கருமத்தம்பட்டியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மழைநீர் செல்ல வசதியாக கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பவர் ஹவுஸ் போன்ற பகுதிகளில் பல லட்ச ரூபாய் செலவில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டது
    கருமத்தம்பட்டி: 

    கருமத்தம்பட்டி, சோமனூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம், பவர் ஹவுஸ், நகராட்சி அலுவலகம் முன்பு போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பல லட்ச ரூபாய் செலவில் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்ல தரைமட்டபாலம் கட்டப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:&

    கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்த பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை தொடர்ந்து மழைநீர் சாலையில் தேங்கி நின்று சாலை பழுதைடந்ததுடன், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.

    இதனையடுத்து இப்பகுதியில் தரைமட்ட பாலம் கட்ட கோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மழைநீர் செல்ல வசதியாக கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பவர் ஹவுஸ் போன்ற பகுதிகளில் பல லட்ச ரூபாய் செலவில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.

    ஆனால் தரைமட்ட பாலம் கட்டப்பட்டும் எந்தவித பயனும் இல்லை. நேற்று மாலை கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது அப்பொழுது கிருஷ்ணாபுரம், பவர் ஹவுஸ், சோமனூர் போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. 

    இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதேபோல் செந்தில் நகர் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி நின்றது. 

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்ததுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல ஏதுவாக வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×