என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
Byமாலை மலர்15 April 2022 10:04 AM GMT (Updated: 15 April 2022 10:04 AM GMT)
திருச்சியில் தமிழ்நாடு மேல்நிலை வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி:
தமிழ்நாடு மேல்நிலை வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்து முடிந்த ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் எங்களின் வேண்டுகோளை ஏற்று காலியாக உள்ள அனைத்து வேளாண் ஆசிரியர் பணியிடங்களையும் காண்பிக்க வழிவகை செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கல்வித் துறை ஆணையர் மற்றும் தொழிற்கல்வி இணை இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று வேளாண் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு அரசு வேளாண் கல்லூரிகளில் வழங்கி வரும் 5 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் கல்லூரிகளிலும் வழங்கி வேளாண் பிரிவு மாணவர்களுக்கு கூடுதலாக இடங்களை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு, கல்வித் துறை அமைச்சருக்கு,தொழிற் கல்வி இணை இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பணி விதிகள் உருவாக்கப்படாமல் உரிய கல்வித்தகுதி இருந்தும் நீண்ட காலமாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வரும் வேளாண் பட்டதாரி ஆசிரியர்களின் தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு மேல்நிலை வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்து முடிந்த ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் எங்களின் வேண்டுகோளை ஏற்று காலியாக உள்ள அனைத்து வேளாண் ஆசிரியர் பணியிடங்களையும் காண்பிக்க வழிவகை செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கல்வித் துறை ஆணையர் மற்றும் தொழிற்கல்வி இணை இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று வேளாண் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு அரசு வேளாண் கல்லூரிகளில் வழங்கி வரும் 5 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் கல்லூரிகளிலும் வழங்கி வேளாண் பிரிவு மாணவர்களுக்கு கூடுதலாக இடங்களை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு, கல்வித் துறை அமைச்சருக்கு,தொழிற் கல்வி இணை இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பணி விதிகள் உருவாக்கப்படாமல் உரிய கல்வித்தகுதி இருந்தும் நீண்ட காலமாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வரும் வேளாண் பட்டதாரி ஆசிரியர்களின் தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X