search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பரமத்திவேலூர் ஸ்ரீ ஹேரம்ப பஞ்ச முக விநாயகர்,  பேட்டை மகாமாரியம்மன்  சிறப்பு அலங்கா
    X
    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பரமத்திவேலூர் ஸ்ரீ ஹேரம்ப பஞ்ச முக விநாயகர், பேட்டை மகாமாரியம்மன் சிறப்பு அலங்கா

    பஞ்சமுக விநாயகர், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

    பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஸ்ரீ ஹேரம்ப பஞ்ச முக விநாயகருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

    அதனைத் தொடர்ந்து மலர்கள், பழம், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஹேரம்ப பஞ்ச முக விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதுபோல் பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்கள் மற்றும் காய்கனி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

    சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
    Next Story
    ×