search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட வாலிபர் பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    தற்கொலை செய்து கொண்ட வாலிபர் பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.

    ரெயில் முன்பு பாய்ந்து வடமாநில வாலிபர் தற்கொலை

    வடமாநில வாலிபர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி :

    திருச்சி காவேரி நகர் டவுன் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு வாலிபர் ஒருவர் திடீரென கொல்லம் விரைவு ரெயில் கடந்து சென்ற போது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருச்சி ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் ரெயில் நிலைய போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பதும் தெரியவந்தது.

    அவர் திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஏன் அவர் தற்கொலை செய்து கொண்டார்? வேறு ஏதும் பிரச்சனையா? என்பது குறித்து ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள பானிபூரி கடைகள் மற்றும் வட மாநில தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×