என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுவற்றில் விளம்பரம் எழுதுவதில் பா.ஜ.க. - தி.மு.க. இடையே மோதல்
Byமாலை மலர்15 April 2022 9:43 AM GMT (Updated: 15 April 2022 9:43 AM GMT)
சுவற்றில் விளம்பரம் எழுதுவதில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கரூர் :
கரூர் மாவட்டம் வடக்கு பிரச்சனை சாலையில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வளாக சுவற்றில் தி.மு.க.வினர் விளம்பரத்தை பா.ஜ.க.வினர் அளித்துவிட்டு பா.ஜ.க சுவர் விளம்பரம் எழுதியதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருதரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு ஏற்படாததால் இரு கட்சிகளுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
பின்னர் பா.ஜ.க நிர்வாகியின் செல்போனை தி.மு.க நிர்வாகிகள் பறித்து கொண்டதாக கூறி பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தி.மு.க நிர்வாகிகளும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து பின்னர் அங்கிருந்து இருதரப்பினரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் சுவற்றில் தி.மு.க நிர்வாகிகள் விளம்பரத்தை வரைந்து விட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X