search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தெடாவூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு

    தெடாவூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
    கெங்கவல்லி:

    கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட தெடாவூர் பேரூராட்சி சிவன் கோவில் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடப்பதாக போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கெங்கவல்லி போலீசார் மற்றும் தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்றனர். அங்கு அனுமதியின்றி 30-க்கும் மேற்பட்ட மாடுகள் மைதானத்தில் விடப்பட்டு வீரர்கள் அதனை பிடித்ததை பார்த்தனர்.

    இதையடுத்து ஜல்லிக்கட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×