search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராம நவமியை முன்னிட்டு சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    ராம நவமியை முன்னிட்டு சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ராம நவமியை முன்னிட்டு சாய்பாபாவிற்கு 4 கால ஆரத்தி விழா

    ராம நவமியை முன்னிட்டு சாய்பாபாவிற்கு 4 கால ஆரத்தி விழா நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு ராம நவமியை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா 2 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. ராம நவமியை முன்னிட்டு சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு காலை 6 மணிக்கு ஆரத்தி நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு புனித தீர்த்த நீராடல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு நெய்வேத்தியமும், சங்கல்ப பூஜையும், சிறப்பு ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மதியம் மற்றும் மாலையில் ஆரத்தி நடைபெற்றது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஆரத்தி விழா ராம நவமியை முன்னிட்டு சாய்பாபா கோவிலில் நேற்று முன்தினம் 4 கால ஆரத்தி விழா நடைபெற்றது. 

    இந்த விழாவில் நாமக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×