search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

    தஞ்சையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில்  சொத்துவரி உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாநகர மாவட்ட தே.மு.தி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை ரயிலடி அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பா-ட்டத்திற்கு தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    மாநில கேப்டன் மன்ற செயலாளர்  செல்வ. அன்புராஜ், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்  முகமது அலி, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் பூபேஷ்குமார் ஆகியோர்

     கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் தே.மு.தி.க. தஞ்சை மாநகர மாவட்டம் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டம் மற்றும் அனைத்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×