search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுவண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ற மருந்துகடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

    புதுவண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ற மருந்துகடை உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் போதை மாத்திரை விற்ற வழக்கில் புதுவண்ணாரப் பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் படி சூலூர் பேட்டையில் மருந்து கடை உரிமையாளர் கோபிநாத்சிங், முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த மருந்து மொத்த விற்பனையாளர் பாண்டுரங்கன், கொடுங்கையூர், கண்ணதாசன் நகரை சேர்ந்த தனியார் கம்பெனி சூப்பர் வைசர் சந்தோஷ், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த மருந்தக ஊழியர் பாலசுப்பிரமணி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்கள் போதை பழக்கத்திற்க்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதை மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 1200 போதை மாத்திரைகள் 5 செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான சதாம் உசேனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×