search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பல்லடம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    1967-ம் ஆண்டுக்கு பின், மேல் படிப்பு, தொழில், வேலை என பலரும் பல்வேறு திசைகளுக்கு சென்றுவிட்டனர்.
    பல்லடம்:

    பல்லடம் அரசு உயர்நிலை பள்ளியில் 1967-68ம் கல்வி ஆண்டில் 10-ம்வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  ஓய்வூதியர்கள் சங்க அலுவலக கட்டடத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஆலோசகர் சுப்பிரமணியன் வரவேற்றார். 

    ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, இணைப்பாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுப்பிரமணியன் கூறுகையில்,

    1967-ம் ஆண்டுக்கு பின், மேல் படிப்பு, தொழில், வேலை என பலரும் பல்வேறு திசைகளுக்கு சென்றுவிட்டனர். இருந்தும் சில நண்பர்கள் தொடர்பில் இருந்து வந்தனர். தணிக்கை துறை, வழக்கறிஞர், கூட்டுறவு சங்க ஊழியர், கல்லூரி விரிவுரையாளர், ஆசிரியர், தொழிலதிபர் என பலரும் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். 

    ஓய்வுக்கு பின், நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. ஆண்டுதோறும் சந்தித்து வாழ்க்கைப் பயணம் குறித்து கலந்துரையாடும் வகையில் நடைபெற்ற சந்திப்பில், இன்றைய குடும்ப சூழல், ஆரோக்கியம் குறித்து விசாரித்துக்கொண்டோம். 

    சிலர் தங்களது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, செய்ய வேண்டிய நல உதவிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்‘ என்றார். 

    இதில் 20-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×