என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம்
Byமாலை மலர்8 April 2022 10:02 AM GMT (Updated: 8 April 2022 10:02 AM GMT)
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்பு டன்னுக்கு 2,750 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு, ஊக்கத்தொகையாக, ஒரு டன்னுக்கு 195 ரூபாய் வழங்குகிறது.
மடத்துக்குளம்:
உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழநி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இப்பகுதி விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.
2013-14ம் ஆண்டில், கரும்பு அரவை திருப்தியாக இருந்த நிலையில் வறட்சி, கரும்புக்கு உரிய விலை கிடைக்காதது, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த 8 ஆண்டாக கரும்பு அரவை குறைந்தளவே நடந்தது.
2016-17, 2017-18 ஆகிய இரு ஆண்டுகள் ஆலை இயங்கவில்லை. கடந்தாண்டு 1,700 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு 63 ஆயிரம் டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டது. இந்நிலையில் பருவ மழைகள் சிறப்பாக பெய்ததோடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை விடுவிக்கப்பட்டதால் நடப்பாண்டு கரும்பு பதிவு அதிகரித்தது.
கரும்பு விவசாயிகளிடம் ஆலை அரவைக்கு 3 ஆயிரத்து, 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்பு டன்னுக்கு 2,750 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு, ஊக்கத்தொகையாக, ஒரு டன்னுக்கு 195 ரூபாய் வழங்குகிறது.
இதனையடுத்து நடப்பாண்டு அரவை சீசன் துவங்கும் வகையில் கடந்த மார்ச் 23-ந்தேதி ஆலையிலுள்ள பாய்லர்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நடந்தது. தொடர்ந்து, ஆலை புனரமைப்பு பணி மேகொள்ளப்பட்டு, கரும்பு வெட்டும் பணிகடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் ஆலையில் கரும்பு அரவைப்பணி துவங்கியது. இதற்கான விழா ஆலை வளாகத்தில் சிறப்பு பூஜை களுடன் நடந்தது.
இதில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் சண்முகவேலு, ஆலை நிர்வாகக்குழு தலைவர் பழனிசாமி, கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ், மேலாளர் கண்ணன், பொறியாளர் செந்தில், ரசாயனர் வேணு-கோபால் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X