search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டமளிப்பு விழா நடந்தது.
    X
    பட்டமளிப்பு விழா நடந்தது.

    அன்னை கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    கோவிலாச்சேரி அன்னை கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17&வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    இதில் கல்விக்குழும தாளாளர் அப்துல்கபூர், தலைவர் அன்வர்கபீர், செயலாளர் ஹூமாயூன் கபீர் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப் பினர்கள் திருச்செல்வம், சேகர் ஆகியோர் கலந்துகொண்டு முதுநிலை மாணவ, மாணவிகள் 188 பேர் இளநிலை மாணவ, மாணவிகள் 765 பேர் என்று மொத்தம் 953 பேருக்கு பட்டங்கள் வழங்கியும், பல்கலைக்கழக அளவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோரை மேடைக்கு அழைத்து தங்கள் குழந்தை களுக்கு பதக்கத்தை அணிவிக்க வைத்து கவுரவித்தனர்.

    இவ்விழாவில் கல்விக்குழு தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார், தலைமை நிர்வாக அதிகாரி ரவி, துணை முதல்வர்கள் இளஞ்செழியன், ராஜா, உள்தர உத்தரவாத மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப் பாளர் லதா மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள், பேரா சிரியர்கள், மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×