search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கமிஷனர் அலுவலகம்
    X
    கமிஷனர் அலுவலகம்

    பொய் வழக்கு போடுகிறார்கள்- கமிஷனர் அலுவலக வளாகத்தில் 3 பேர் தற்கொலை முயற்சி

    தங்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
    சென்னை:

    சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த 3 பேர், திடீரென தங்கள் உடலில் பிளேடால் கீறிக் கொண்டும், பெட்ரோல் ஊற்றிக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் எழும்பூர் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில்  வசிப்பவர்கள் என்பது தெரியவந்தது. தங்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

    காயமடைந்த 3 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
    Next Story
    ×