search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி கிடந்த காட்சி.
    X
    விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி கிடந்த காட்சி.

    கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது- பனியன் கம்பெனி உரிமையாளர்கள் 2 பேர் பலி

    வாளையார் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதியல் பனியன் கம்பெனி உரிமையாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    திருப்பூர் கூத்தம்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் பாலாஜி (வயது 47), முருகேசன் (49). இவர்கள் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இவர்களது பனியன் கம்பெனிக்கு முதலீட்டாளர்கள் வந்தனர். நேற்று முதலீட்டாளர்கள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு புறப்பட்டுச் சென்றனர்.

    அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக பாலாஜி, முருகேசன் மற்றும் நண்பர்கள் பதுருதீன், மைனுதீன் ஆகியோர் சென்றனர். பின்னர் அவர்கள் 4 பேரும் காரில் திருப்பூர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    கார் வாளையார் ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடி அருகே வந்தபோது சாலையின் ஓரத்தில் நின்ற கண்டெய்னர் லாரி மீது கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த பாலாஜி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    பதுருதீன், மைனுதீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுபற்றி வாளையார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரை இயக்கிய டிரைவர் தூக்க கலக்கத்தில் கண்டெய்னர் லாரி மீது மோதியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×