என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் 25-ந் தேதி கும்பாபிஷேகம்- அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
Byமாலை மலர்25 March 2022 6:30 AM GMT (Updated: 25 March 2022 11:48 AM GMT)
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 94 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 80 தனியார் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை:
குன்றத்தூர் முருகன் கோயில் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் ஆகிய கோயில்களில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,, அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குன்றத்தூர் கோவிலில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேகப் பணிகள் உள்பட இக்கோயிலில் நடைபெற்றுவரும் திருமண மண்டப பணிகளையும் ஆய்வு செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைகள் கட்டும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.2 கோடி செலவில் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள குறுகிய மலைப்பாதை அகலப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அது மட்டுமல்லாமல் இங்கு ரூ.3.20 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள திருமண மண்டப பணிகள் குறித்தும் தற்போது ஆய்வு மேற்கொண்டோம் . மேலும் தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி இங்கு நடைபெற்றுவரும் கும்பாபிஷேக பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த மாதம் 25-ந்தேதி அன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வருகிற மே மாதம் சேக்கிழாருக்கு குருபூஜை அரசு விழாவாக நடைபெற உள்ளதால் இங்குள்ள சேக்கிழார் மணிமண்டபத்தை புனரமைக்கவும் ஆய்வு மேற்கொண்டோம் .
மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நாகேஸ்வரசுவாமி கோயில் திருப்பணிகள் ரூ.1.20 கோடி செலவில் நடைபெற உள்ளது.
நுழைவாயில் கதவு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு உள்ளது என்பதால் அதனை மாற்றி தேக்கு மரத்திலான கதவுகள் அமைக்கப்படுகிறது.
கோயிலுக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், கோயிலுக்கு வருமானத்தை பெருக்கவும் புதிய கடைகள் அமைக்கவும் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோயில்கள், மற்றும் குடமுழுக்கு துவக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற உள்ள கோயில்கள் ஆகியவற்றில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களில் 94 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 80 தனியார் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும 1,500 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளன அவற்றில் 560 திருக்கோயில்களுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் துவக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது .
கோயில் நிலங்களில் குடியிருந்து வரும் வாடகை தாரர்களிடமிருந்து ரூபாய் 500 கோடி வாடகை வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 142 கோடி ரூபாய் வரை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது .
முறையாக தொடர்ந்து வாடகை செலுத்தாதவர்கள் மீது உரிய முறையில் சட்டப்படி வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இங்கு உண்மை நிலையை கண்டறிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர் தா.மோ. அன்பரசன், அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன், செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படியுங்கள்...வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்.... கடும் எச்சரிக்கை விடுத்த போக்குவரத்துத்துறை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X