search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ வைக்கப்பட்ட  மோட்டார் சைக்கிள்
    X
    தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

    தக்கலை அருகே தொழிலாளி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

    தக்கலை அருகே தொழிலாளி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது.
    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மைலோடு பகுதியை சேர்ந்தவர் ஐயனபிள்ளை. கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சென்றார். நள்ளிரவில் இவரது மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றி எரிந்தது.

    தீ மள மள என எரிவதை கண்ட அவர் மோட்டார் சைக்கிளை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இது சம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் ஐயனபிள்ளை புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×