search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீவிபத்தில் சேதமடைந்த நெல் அறுவடை எந்திரம்
    X
    தீவிபத்தில் சேதமடைந்த நெல் அறுவடை எந்திரம்

    நெல் அறுவடை எந்திரம், குடிசை வீடு எரிந்து நாசம்

    உப்பிலியபுரத்தில் நெல் அறுவடை எந்திரம் மற்றும் குடிசை வீடு எரிந்து நாசம் ஆனது.
    திருச்சி:

    உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி   பி.மேட்டூரில் மாரியம்மன் கோயில்  அருகே வசிப்பவர் சுரேஷ். இவர் நெல் அறுவடை எந்திரம் சொந்தமாக வைத்து, நெல் அறுவடைப் பணிகளை செய்து வருகிறார். 

    இவருக்கு சொந்தமான அறுவடை எந்திரம் ஒன்று,  கோட்டப்பாளையம் அருகே  நெல் அறுவடைப் பணியிலிருந்த போது தீடிரென தீப்பிடித்து எரிந்தது. 

    தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிக்கத்தம்பூரை சேர்ந்தவர் தனலட்சுமி வயது 60. விதவை. இவர், துறையூரிலுள்ள ஹோட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். 

    இந்நிலையில் அவர் வேலைக்கு சென்ற நிலையில் தீடிரென குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து  தகவல் அறிந்ததும் துறையூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 

    இருப்பினும் வீட்டில் இருந்த துணி மணிகள், சமையல் பாத்திரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×