என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல் அறுவடை எந்திரம், குடிசை வீடு எரிந்து நாசம்
Byமாலை மலர்2 March 2022 9:22 AM GMT (Updated: 2 March 2022 9:22 AM GMT)
உப்பிலியபுரத்தில் நெல் அறுவடை எந்திரம் மற்றும் குடிசை வீடு எரிந்து நாசம் ஆனது.
திருச்சி:
உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூரில் மாரியம்மன் கோயில் அருகே வசிப்பவர் சுரேஷ். இவர் நெல் அறுவடை எந்திரம் சொந்தமாக வைத்து, நெல் அறுவடைப் பணிகளை செய்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான அறுவடை எந்திரம் ஒன்று, கோட்டப்பாளையம் அருகே நெல் அறுவடைப் பணியிலிருந்த போது தீடிரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிக்கத்தம்பூரை சேர்ந்தவர் தனலட்சுமி வயது 60. விதவை. இவர், துறையூரிலுள்ள ஹோட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வேலைக்கு சென்ற நிலையில் தீடிரென குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் துறையூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த துணி மணிகள், சமையல் பாத்திரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X