search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
    X
    வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

    வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு

    மருங்கை கிராமத்தில் வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கமளித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருங்கை கிராமத்தில், ஈச்சங் கோட்டை வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    பயிற்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் விவசாயிகளுடன் சேர்ந்து விவசாய பணி அனுபங்களை பெற்றுக் கொள்கின்றனர். ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் டாக்டர் வேலாயுதம் அறிவுரையின் கீழ் மாணவர்கள் விவசாயிகளுடன் சேர்ந்து ‘வீட்டுத் தோட்டம் அமைப்பது மற்றும் விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினர்.

    வீட்டுத் தோட்டத்தில் எந்தெந்த பயிர்கள் வைக்கலாம் என்று விவசாயிகளுக்கு கற்று கொடுத்தனர். இந்நிகழ்வின் போது பேராசிரியர்கள் சண்முகப்பிரியா, ராஜசேகர், மாணவர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×