search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய மின்வாரிய அதிகாரி வீடு.
    X
    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய மின்வாரிய அதிகாரி வீடு.

    தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருபவர் சுடலைமுத்து. இவரது வீடு தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ளது. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

    இந்நிலையில் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் இன்று காலை சுடலைமுத்து வீட்டுக்கு சென்றனர். 2 குழுவாக சென்ற அவர்கள் காலை 9 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவும், வெளியாட்கள் வீட்டிற்குள் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது சுடலைமுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என்பது குறித்து முழுமையான சோதனைக்கு பின்னரே தெரியவரும்.
    Next Story
    ×