search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    லூர்துபுரம் ஆலயத்தில் தேர்பவனி

    காலை 11 மணிக்கு கோவை, மேய்ப்பு பணி நிலையத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டது.
    அவிநாசி:

    அவிநாசி சேவூர் அருகே லூர்துபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஆண்டு திருவிழா நடந்தது. கடந்த 9-ந்தேதி  கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.13-ந் தேதி மாலை 5.30 மணிக்கு  ஜெபமாலை, திருப்பலி, வேண்டுதல் தேர்பவனி நடந்தது.

    கோவை மறைமாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையேற்று நடத்தினார். கடந்த 15-ந்தேதி திருவிழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, உறுதிபூசுதல், வேண்டுதல் தேர் ஆகியவை நடந்தன. 

    காலை 11 மணிக்கு கோவை, மேய்ப்பு பணி நிலையத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு தேர்பவனி நடந்தது. 

    ஏற்பாடுகளை பங்குத்தந்தை விக்டர் சந்தியாகு, உதவி பங்குத்தந்தை சிஜி ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×