search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
    X
    புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

    சென்னை புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில் 7 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று 45-வது புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். விழாவில், 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- 

    மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும். மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படுகிறது. செம்மொழி தமிழின் சிறப்புகளை உலகமெங்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இப்போது ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து, மாநில பாடலாக ஆக்கப்பட்டுள்ளது.

    ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில் 7 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட நூலகங்களில் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்காக ரூ.2.35 கோடியில் ஆங்கில இதழ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழின் அடையாளமாக திகழும் நுல்கள் திராவிட மற்றும் ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த புத்தக கண்காட்சி இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
    Next Story
    ×