search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 கோடி மோசடி

    தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 கோடி மோசடியில் ஈடுபட்ட விற்பனை மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேனேஜராக உள்ளார். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    அதில் கூறியிருப்பதாவது,

    எங்களது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கரூர் பகுதியை சேர்ந்த சேல்ஸ் மேனேஜர் மணிகண்டன், புதுக்கோட்டையை சேர்ந்த கமிஷன் ஏஜென்ட் துரைராசு மற்றும் ஆறுமுகம் ஆகிய 3 பேர் சேர்ந்து நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வருபவர்களின் ஆவணங்களுக்கு போலி ஆவணம் தயாரித்து சுமார் ரூ.2 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி வழக்கு பதிவு செய்து மணிகண்டன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×