search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தஞ்சையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு கிளப்புகள், அனைத்து எப்எல் 2, 3,3ஏ, 3ஏஏ உரிமம் வைத்துள்ள ஓட்டல் உரிமதாரர்கள் தங்களது மதுக்கூடத்தை 4 நாட்கள் மூட உத்தரவிடப்படுகிறது.

     அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய ஏதுவாக நாளை (17-ந் தேதி), 18, 19 மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளான 22-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×