என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத்திய சிறை சிறப்பு முகாமில் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட கைதி மீது வழக்கு
Byமாலை மலர்29 Jan 2022 7:20 AM GMT (Updated: 29 Jan 2022 7:20 AM GMT)
மத்திய சிறை சிறப்பு முகாமில் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட கைதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அகதிகள் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ளது. இந்த முகாம்களில் வெளி நாட்டைச் சேர்ந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்ததும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சிலோன் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (40). கைதியாக இருந்து வருகிறார்.
இங்கு கியூ பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது37). இவர் சம்பவத்தன்று அகதிகள் முகாமில் கணக்கெடுக்கும் பணிக்காக சென்றுள்ளார்.
அப்போது பாண்டியன் எதற்காக இங்கு வருகிறாய்? இங்கே என்ன வேலை? என்று கேட்டு சிவகுமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
பின்னர் இதுகுறித்து தலைமை காவல் சிவக்குமார், மாநகர போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கைதி, காவலரை முகாமில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய சம்பவம் மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் அகதிகள் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ளது. இந்த முகாம்களில் வெளி நாட்டைச் சேர்ந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்ததும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சிலோன் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (40). கைதியாக இருந்து வருகிறார்.
இங்கு கியூ பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது37). இவர் சம்பவத்தன்று அகதிகள் முகாமில் கணக்கெடுக்கும் பணிக்காக சென்றுள்ளார்.
அப்போது பாண்டியன் எதற்காக இங்கு வருகிறாய்? இங்கே என்ன வேலை? என்று கேட்டு சிவகுமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
பின்னர் இதுகுறித்து தலைமை காவல் சிவக்குமார், மாநகர போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கைதி, காவலரை முகாமில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய சம்பவம் மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X