என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கமுதி அருகே சோள பயிரை மேய்ந்த 78 ஆடுகள் உயிரிழப்பு
Byமாலை மலர்29 Jan 2022 6:36 AM GMT (Updated: 29 Jan 2022 6:45 AM GMT)
கமுதி அருகே சோள பயிரை சாப்பிட்ட 78 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமுதி:
ராமநாதபுரம் மாவட் டம் வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, விவசாயி. இவருக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். திருப்பதி ஏராளமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அந்த பகுதிக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் தொழுவத்தில் அடைப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை திருப்பதி மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அந்த ஆடுகள் அங்கு பயிரிட்டு அறுவடை செய்யப்பட்ட சோளப்பயிர்களை சாப்பிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆடுகள் ஒவ்வொன்றாக திடீரென மயங்கி விழுந்தன. இதனை கண்டு திருப்பதி அதிர்ச்சி அடைந்தார். மயங்கிய ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பிலான 78 செம்மறி ஆடுகள் இறந்து விட்டன.
இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆடுகளை இழந்ததால் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வரும் தனது குடும்பத்தை பாதுகாக்க அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பதி கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X