என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி - கோட்டகுப்பம் நகராட்சியில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
Byமாலை மலர்28 Jan 2022 12:41 PM GMT (Updated: 28 Jan 2022 12:41 PM GMT)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகராட்சி பகுதியில் உள்ள கட்சிகள் சார்ந்த சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன.
வானூர்:
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்குப்பம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கட்சி கொடி கம்பங்கள் அனைத்தையும் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நகராட்சி பகுதியில் உள்ள கட்சிகள் சார்ந்த சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கோட்டகுப்பம் நகராட்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X