search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகள், பொதுமக்கள் திரண்டு நின்று அலங்கார ஊர்தியை வரவேற்றார்.
    X
    அதிகாரிகள், பொதுமக்கள் திரண்டு நின்று அலங்கார ஊர்தியை வரவேற்றார்.

    குடியரசு தின அலங்கார ஊர்திக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

    குடியரசு தின அலங்கார ஊர்தி இன்று கோவை வந்தது.
    கோவை:

    டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகளும் பங்கேற்றன. 

    இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் வடிவ மைக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்திகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. 

    இதைத்தொடர்ந்து அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென் னையில் இருந்து கொடி யசைத்து அலங்கார ஊர்திகளை தமிழகத்தின் பிற நகரங்களுக்கு அனுப்பி வைத்தனர். 

    3 அலங்கார ஊர்திகள் தனித்தனியாக கோவை, ஈரோடு, மதுரை ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அலங்கார   ஊர்  மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், விடுதலை தியாகத்துக்கு வித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திர போராட்டத்திற்காக போராடியவரும், சமூக சீர்திருத்தவாதியுமான சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவ மைக்கப்பட்டு உள்ளது. 

    இந்த அலங்கார ஊர்தி இன்று பிற்பகல் 2.05 மணிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கு வந்தது- அங்கு அதிகாரிகள், பொதுமக்கள் திரண்டு நின்று அலங்கார ஊர்தியை வரவேற்றார். இதைத்தொடர்ந்து   அலங்கார ஊர்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப் படுகிறது.  அலங்கார ஊர்தி இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

    காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அதனை பார்க்கலாம். மேலும் தினமும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. 
    Next Story
    ×