search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஆபாச நடனமாடும் கலைஞர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

    ஆபாச நடனமாடும் கலைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட கிளை தலைவர் மகேஸ்வரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். 

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    மேடை மெல்லிசை தொழிலை எங்கள் வாழ் வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறோம். நமது பண்பாடு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த செயலையும் மேடைகளில் நிகழ்த்தக் கூடாது என்பதே எங்கள் சங்கத்தின் கொள்கை யாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இசை நிகழ்ச்சி களில் ஒரு குழுவினர் ஆபாசமாக உடை அணிந்து ரசிகர்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் குத்து பாடல் களுக்கு நடனமாடி வருகிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என புகார்கள் வந்தது.

     இது தொடர்பாக நாங்கள் அந்த கலைஞர்களுடன் பேசினோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அது போன்ற செயல்களில் ஈடு பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட இசைக்கலைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    பெண்இசைக்கலைஞர் ஆபாசமாக ஆடுவது போன்ற புகைப்படங்களையும் மனுவில் இனைத்திருந்தனர்.
    Next Story
    ×