search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்.
    X
    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்.

    மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பிரின்ஸ் எம்எல்ஏ பங்கேற்றார்.
    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் மன்ற துணைச் செயலாளர் பேராசிரியர் தேவகுமார் சாமுவேல் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர் மன்ற தலைவர் டாக்டர் மத்தியாஸ் தலைமை தாங்கி  உரை ஆற்றினார். 
    செயலாளர் முனைவர் பிஜி அறிக்கை வாசித்தார். பொருளாளர் முனைவர் ஆப்ஸ் பென் ரெஜி வரவு செலவு அறிக்கை வாசித்தார். 

    சிறப்பு விருந்தினராக பிரின்ஸ் எம்.எல்.ஏ. வரலாற்றுத் துறையில் பயின்றதால் தன்னால் சாதிக்க முடிந்தது என சிறப்புரை ஆற்றினார். கல்லூரி தாளாளர் ஜெயச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.  

    நிகழ்ச்சியில் கல்லூரி ஆண்டு மலர் மற்றும் நியூஸ் லெட்டர் ஆகியவற்றை கல்லூரி தாளாளர் ஜெயச்சந்திரன் மற்றும் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். 

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் பால்ராஜ் எதிர்காலம் திட்டம் குறித்து பேசினார். கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலர் முனைவர் ஐசக் சோபா ராஜ் நன்றி கூறினார். கல்லூரி காலகட்டத்தில் தங்களுடன் பயின்ற மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

    முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Next Story
    ×