search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோவில் கைது

    ஆம்பூர் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி 3 வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த உமராபாத் பகுதியை சேர்ந்த பன்னீர் (வயது 65) என்பவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) யுவராணி விசாரணை நடத்தினர். 

    பின்னர் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பன்னீர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×