என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்27 Jan 2022 9:47 AM GMT (Updated: 27 Jan 2022 9:47 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டிய வீடுகளல் நகை பணம் திருட்டு போன வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியில் பூட்டிய 3 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து கடந்த 7ந்தேதி நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றனர். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்படி தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனடிப்படையில் தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதியை சேர்ந்த முத்தையா, மணிகண்டன், ரங்கநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தநிலையில் அந்த திருட்டு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட காளியப்பன் (வயது28) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 பவுன் நகைகளும், ரூ.60 ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வீரகுமார் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருப்பதாகவும், அவரை நீதிமன்ற உத்தரவின்படி காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X