search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    கரூரில் ரெயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்

    கரூரில் ரெயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர் :

    கரூர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே செல்லும் ரெயில்பாதையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

    அந்த வழியாகக் சென்றவர்கள் இது குறித்து  கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் கருப்பு கலர்  ஜீன்ஸ் பேண்ட்டும்  ஊதா நிறத்தில் மஞ்சள் கட்டம் போட்ட  சட்டையும் அணிந்திருந்தார். கையில் வி.கே. என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது.  அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது தெரிய வில்லை.  

    அவரது பிணம் அங்கு எப்படி வந்தது? ரெயிலின் குறுக்கே விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? எதற்காக தற்கொலை செய்தார்? அல்லது அடித்துக் கொலை செய்து ரெயில்பாதையில் வீசப்பட்டாரா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×