search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் நகை- பணம் கொள்ளை

    ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மேலகலமனூர் கிராமம் கம்மாள தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 60). விவசாயி. இவரது தங்கை திருவள்ளூரில் வசித்து வருகிறார். தனது தங்கை மகளின் பெயர் சூட்டு விழாவில் பங்கேற்க மோகன் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று இருந்தார். பின்னர் நேற்று வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 7 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மோகன் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×