search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

    திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருங்குளம் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி (வயது 60). இவர் நேற்றுமுன்தினம் தன் உறவினர்களை சந்திப்பதற்காக காஞ்சிபுரத்துக்கு சென்று இருந்தார். பின்னர் நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ,40 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சரஸ்வதி கனகம்மாசத்திரம் போலீசாரிடம் புகார் அளித்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×