search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலையில் காட்டு எருமைகளால் விவசாயிகள் அச்சம்

    மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் வரை உள்ள விளைநிலங்களில் தென்னை உட்பட பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    உடுமலை

    உடுமலை அருகே வனப்பகுதியை ஒட்டி  விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். உடுமலை அருகே ஜிலேபி நாயக்கன்பாளையம், வல்லகுண்டாபுரம் உட்பட கிராமங்களில் விவசாயம் பிரதானமாக உள்ளது.

    மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் வரை உள்ள விளைநிலங்களில் தென்னை உட்பட பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் விளைநிலங்களில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் சுற்றி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியினர் தெரிவித்த தகவல் அடிப்படையில் வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×