என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்
Byமாலை மலர்24 Jan 2022 9:34 AM GMT (Updated: 24 Jan 2022 9:34 AM GMT)
ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆலயம் அடைக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு ஆலயத்தில் ஜான்சன் என்பவர் காவலாளியாக பணியில் இருந்தார். இரவு 10 மணியளவில் அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் ஆலய நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். திடீரென அவர்கள் ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி ஜான்சன் இது குறித்து ஆலய பாதிரியார் பாஸ்டின் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து சென்று பார்த்தார்.
பின்னர் பாதிரியார் பாஸ்டின் ஜோசப் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்து சிலையை உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆலயம் அடைக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு ஆலயத்தில் ஜான்சன் என்பவர் காவலாளியாக பணியில் இருந்தார். இரவு 10 மணியளவில் அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் ஆலய நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். திடீரென அவர்கள் ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி ஜான்சன் இது குறித்து ஆலய பாதிரியார் பாஸ்டின் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து சென்று பார்த்தார்.
பின்னர் பாதிரியார் பாஸ்டின் ஜோசப் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்து சிலையை உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X